வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர்
இலங்கைசெய்திகள்

தலிபான்களை பின்பற்றும் பிக்கு மாணவர்கள்!!

Share

பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள், சஹரானைப் போல தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பதாகவும் இவ்வகையான மாணவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் மிஹிந்தல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

புத்தரின் தர்ம சிந்தனைகளைப் பின்பற்றாமல் தலிபான்கள் லெனின் கோட்பாட்டை பின்பற்றுவதுபோல இவர்கள் பின்பற்றுகின்றனர் – என்றார்.

விசேட மற்றும் பொது பட்டம் பெறும் இரு வகையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதாகவும் அவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்  என்றும் சுட்டிக்காட்டினார்.

இதே சட்டத்தை பிக்கு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், சஹரான் என்ற நபர் தாடியுடன் இறந்ததாகவும் அதன் பின்னர் பலர் சஹாரானைப் போல  தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள் மற்றும் பௌத்த துறவிகள், தலைமுடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் .பௌத்த பாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பயிலும் கலைப் பீட பிக்கு மாணவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகின்றனர் என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...