6 55
இலங்கைசெய்திகள்

தமிழர் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share

மட்டக்களப்பு(batticaloa) கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை(28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டு 23 பரல்களில் 15 இலட்சம் மில்லி லீட்டர் கோடா 5,25,000 லீட்டர் கசிப்பு மற்றும் தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரல்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் பயணிக்கும் தோணியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...