3 1 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

Share

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ச இன்று (05.03.2024) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவை வரவேற்றனர்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. அத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.

எனினும் எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன். தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன். ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது.

நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம் என குறிப்பினட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...

police shooting
இலங்கை

காவல்துறையினர்மீது தாக்குதல் முயற்சி – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி,

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால்...