3 1 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

Share

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் அறிவிப்பு

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ச இன்று (05.03.2024) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவை வரவேற்றனர்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. அத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.

எனினும் எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன். தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன். ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது.

நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம் என குறிப்பினட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...