24 660e642457adc
இலங்கைசெய்திகள்

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

Share

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க மேற்கொள்ளப்பட்ட பசில் ராஜபக்சவின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, அரசியலமைப்பு ரீதியில் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போவதில்லை எனவும் அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவசர நாடளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும், அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நாடளுமன்ற உறுப்பினர்கள் போதாத காரணத்தினால் அந்த முயற்சி இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...