Photo 1 44444 1
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தி

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி வரை அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நேற்று முதல் மதுபானசாலைகளைத் திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானசாலைகள்  திறக்கப்பட்ட நேரம் முதல் மதுபானசாலைகள் வாயில்களில் மக்கள் கூட்டம் பெருந்திரளாக அலைமோதுகிறது.

இந்த நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த செயற்பாடானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு மிகப் பெரும் இடையூறாகும்.

மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இதனால் தற்போது நாட்டில் மதுபான கொத்தணி உருவாகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – என வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...