Photo 1 44444 1
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தி

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி வரை அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நேற்று முதல் மதுபானசாலைகளைத் திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானசாலைகள்  திறக்கப்பட்ட நேரம் முதல் மதுபானசாலைகள் வாயில்களில் மக்கள் கூட்டம் பெருந்திரளாக அலைமோதுகிறது.

இந்த நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த செயற்பாடானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு மிகப் பெரும் இடையூறாகும்.

மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இதனால் தற்போது நாட்டில் மதுபான கொத்தணி உருவாகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – என வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...