Protest 1 1 650x37599 1
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் இருபது பேர் வரை இணைந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பொதுமக்கள் கடும் கஷ்ட நிலையில் உள்ள இந்த நேரத்தில், மதுபான நிலையங்கள் அத்தியாவசிய சேவையா?

நடைபாதை வர்த்தகர்கள் போன்றோர் தவிக்கும் நிலையில் மதுபானசாலைகள் திறந்தமை கண்டிக்கத்தக்கது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க முடியாது என அறிவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோஷங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் இருவரை பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...