பந்துல குணவர்தன
அரசியல்இலங்கைசெய்திகள்

ஸ்டாலினின் கருத்து தொடர்பில் அலட்டமாட்டோம்! – பந்துல கூறுகின்றார்

Share

“கச்சதீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. இந்நிய அரசின் நிலைப்பாடு அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, ‘இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிகழ்வொன்றின்போது, இலங்கை வசமுள்ள கச்சத்தீவை மீளப்பெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?” என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

“ஒவ்வொரு நாட்டிலும் மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம். உதாரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் வகித்தபோது, அவர் பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இவை அரசின் நிலைப்பாடு அல்ல. அவற்றை அரசின் நிலைப்பாடாக சர்வதேசமும் ஏற்காது. அந்தவகையில் தனது தனிப்பட்ட கருத்தை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கலாம். இது தொடர்பில் பிரதமர் மோடி எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை. இதன்மூலம் இந்தியாவின் நிலைப்பாடு மாறவில்லை என்பதை அறியமுடிகின்றது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...