tamilni 334 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட ”இலங்கை மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் ஈழத் தமிழர்களது இன விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சர்வதேச அரங்கில் முன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு வலுவான அமைப்பாக இன்றுவரை நாடு கடந்த தமிழக அரசாங்கமே செயற்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எவ்விதமான செயற்பாடுகளையும் ஈழத்தில் செய்ய விடாது இலங்கை அரசாங்கம் பாரிய தடைகளை விதித்திருக்கின்றது. இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்ளும் நாட்டிற்குள் வர முடியாதபடி தடை உத்தரவு போட்டிருக்கின்றது.

இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக பல வழிகளிலும் சர்வதேச அரங்கில் பாரிய அழுத்தங்களை இன்று வரை பிரயோகிக்கின்ற ஓர் பலமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றமையே காரணமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று இருக்கக்கூடிய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஈழத் தமிழர்கள் விவகாரங்களில் அன்று தொடக்கம் இன்று வரை எதிராகவே தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகின்றது.

இதற்கு சான்றாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம் ஓர் உதாரணமாகும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தமிழகத்தில் தொடரும் தொடர வேண்டும் இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சிகள் தடை போட்டாலும் அத் தடைகளை அவர்கள் திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் தடைகள் அனைத்தும் தமிழக தொப்புள் கொடி உறவுகளால் அனைத்து வழிகளாலும் எதிர்க்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு மிக தெளிவாக வலியுறுத்துவதோடு மேலும் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் தமிழர் விரோதச் செயல்களையும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...