plastic
இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!

Share

பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேசத்திலும் இலங்கையிலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றாடல் அமைச்சு ஐந்து ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் உற்பத்திகளையும் தடை செய்யவிருப்பதாக சுற்றாடல் அமைச்சு செயலாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சுற்றாடலுக்குப் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றாடலில் கடுமையான தாக்கத்தை உருவாக்குகின்றன.

எனவே எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், பீங்கான்கள், மாலைகள், முட்கரண்டிகள், இடியப்பத் தட்டுகள் போன்றவை தடை செய்யப்படவுள்ளன.

அத்துடன் நாட்டில்  தேவைக்கதிகமான கையிருப்பு உள்ளதால் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பிளாஸ்டிக் உருண்டைகளின் (Plastic Pellets) இறக்குமதியையும் கட்டுப்படுத்தவுள்ளதாகவும் இதன்மூலம் டொலரை சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்

மேற்குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு  தொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு இது உந்து சக்தியாக இருக்கும். மக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பீங்கான், கரண்டிகள் போன்றவற்றை வீடுகளில் உபயோகிப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் வெளிப்புறங்களில் உதாரணமாக சுற்றுப் பயணங்கள்  மேற்கொள்ளும் போது குறித்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதோடு அவற்றை சூழலில் வீசுவது போன்ற செயற்பாடுபளை செய்வதன் மூலம் சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றனர்.

சந்தைக் கேள்விக்கேற்ப பிற பிளாஸ்டிக் பொருட்களையும் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பிளாஸ்டிக் அற்ற மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற சுற்றாடலை உருவாக்க முயற்சிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...