diana gamage
அரசியல்இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்வதற்கு தடை! – காரணம் வெளியாகியது

Share

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெளிநாடு செல்வதற்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராக்கல் மனுவை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த மனு இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று இரவு டயனா கமகே நாட்டை விட்டு தப்பிச் செல்லவுள்ளதாகவும், அவர் வெளிநாடு சென்றால் விசாரணை முற்றாக நசுக்கப்படும் எனசட்டத்தரணி சமூகத்திற்கு மிகவும் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக சட்டத்தரணி வன்னிநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே குறுகிய காலத்திற்கு வெளிநாடு செல்வதை தடை செய்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி வன்னிநாயக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்த உத்தரவை பிறப்பிப்பது கடினம் என நீதவான் நந்தன அமரசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி வன்னிநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு வரும்போது டயனா கமகே வெளிநாட்டில் இருப்பார் என குறிப்பிட்டார்.

அப்போது இந்த வழக்கால் எந்த பயனும் ஏற்படாது என சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறுகிய காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தற்காலிகமாகத் தடை செய்யுமாறு கோரிய சட்டத்தரணி வன்னிநாயக்க, தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கு வருகைதந்து வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்கிக் கொள்ளும் திறன் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றில் விடயங்களை நிரூபிக்குமாறு சட்டத்தரணிகளிடம் இதன்போது தெரிவித்தார்.

இதன்படி, சட்டத்தரணி துசித குணசேகர சமர்ப்பித்த சத்திய கடதாசியின் அடிப்படையில் சட்டத்தரணி வன்னிநாயக்க விடயங்களை முன்வைத்துள்ளார்.

அந்த விடயங்களை பரிசீலித்த பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...