gotabaya rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் comment தெரிவிக்க தடை!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ‘கருத்து ‘ (comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘லைக்’ மற்றும் ‘செயார்’ ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று இரவு முதல் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட followers உள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தற்போதைய சூழ்நிலையில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகின்றது. ‘கோ ஹோம் கோட்டா’ என்ற பரப்புரையும் ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஜனாதிபதி பதவியை வகித்த எவரும், இவ்வாறு தடைவிதிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...