இலங்கைசெய்திகள்

நாடு திரும்பிய மூவருக்கும் பிணை

Share
tamilni 258 scaled
Share

நாடு திரும்பிய மூவருக்கும் பிணை

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் யாழ். குடத்தனையை வந்தடைந்த மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை நேற்று (16.11.2023) யாழ். பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிணையில் விடுவிக்கப்பட்ட மூவரும் யுத்த காலத்தில் இந்தியா – தமிழ்நாட்டிற்க்கு புலம் பெயர்ந்து நீண்டகாலம் அங்கு வசித்து வந்த நிலையில் படகு மூலம் நாடு திரும்பி இருந்தனர்.

அவர்கள் தமது சொந்த ஊரான குடத்தனை பகுதியில் தங்கி இருந்த வேளை அவர்களை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பருத்தித்துறை நீதிமன்றம் நேற்றைய தினம் தலா ஒரு இலட்சம் ஆட்பிணை மற்றும் வாராந்தம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடப்படவேண்டும் என்கின்ற நிபத்தனையில் பிணை வழங்கியுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...