சீரற்ற காலநிலை! – மத்திய,சப்ரகமுவ மாகாணங்களுக்கு கூடுதல் பாதிப்பு

1635812679 weather rain new 2 1

மத்திய மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஐவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். நால்வர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்து 150 வீடுகள் சேதமடைந்துள்ளன.

137 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

Exit mobile version