UxjhAsb31BG6teafqgAT 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆசிரியரின் மோசமான செயல் ! பல மாணவிகள் துஷ்பிரயோகம்!

Share

ஆசிரியரின் மோசமான செயல் ! பல மாணவிகள் துஷ்பிரயோகம்!

பொலன்னறுவையில் பாடசாலை மாணவிகளை ஆசிரியரொருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விஜயபாபுர பிரதேசத்தில் தனியார் ஆங்கில ஆசிரியர் ஒருவரால் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை காலமும் தமது மகள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக 6 சிறுமிகளின் பெற்றோர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் அந்த பகுதியில் ஏராளமான சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், ஆனால் சமூகத்தின் முன் பிள்ளைகள் அவமானப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் 12 – 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகளுக்கமைய, சந்தேகத்திற்குரிய 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தனியார் ஆங்கில ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...