image 5f78cf2a4e
இலங்கைசெய்திகள்

மீண்டும் வரிசை!!!

Share

அனைத்து வகையான எரிபொருட்களும் கிட்டத்தட்ட 100 ரூபாவால் குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிவருவதால் கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் எரிபொருள் விலையில் கணிசமாக குறைக்கப்படும் என்ற அச்சத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் புதிய முற்பதிவுகளை செய்யவில்லை என்பதால், வழமைக்கு மாறான வரிசைகள் காணப்படுகின்றன.

ஏப்ரல் மாத விலை திருத்தத்தின் போது அரசாங்கம் எரிபொருள் விலையை கணிசமாக குறைக்கும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைவதன் காரணமாகவும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் குறைவினாலும் இலங்கையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படால் என்று தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...