image 56d06625a2
இலங்கைசெய்திகள்

பிரியா- நடேசலிங்கம் குடுப்பத்துக்கு நிரந்தர விசா வழங்கியது அவுஸ்திரேலியா

Share

அவுஸ்திரேலியாவில் 4 ஆண்டுகளாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.

குறித்த குடும்பத்தை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த அரசாங்கத்தால் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இக் குடும்பத்துக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு, பிலோலா எனும் பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் அகதி குடும்பத்தினரை பார்வையிட்ட அவுஸ்திரேலிய உள்துறை அதிகாரிகள், அவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என அவுஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இவ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் தலையிட்டு தனது அதிகாரங்களை பயன்படுத்தி, இக் குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் நிரந்தர விசாக்களை கொடுத்துள்ளதாகதெரிவித்தனர்” என இக் குடும்பத்தின் விடுதலைக்காக செயல்பட்ட ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

2012 இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி, அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, 2018ஆல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு, மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் முயற்சி நீதிமன்ற தலையீட்டால் தடுக்கப்பட்ட போதிலும் நான்கு ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...