rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

Share

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

வர்த்தகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கம விதுரவின் உதவியாளர்கள் என தற்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வர்த்தகரை கொலை செய்வதற்காக அவரது வர்த்தக இடத்திற்கு அருகில் வந்திருந்த போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்று கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் அங்கு சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...