robbery gold 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியில் சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி அறுப்பு!

Share

வீதியால் நடந்து சென்ற பெண்ணை தாக்கி , தள்ளி விழுத்தி விட்டு சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.,

உறவினர் ஒருவரின் அந்தியேட்டி கிரிகைக்கு சென்று, பேருந்தில் வந்திறங்கி தனது வீடு நோக்கி வீதியால் குறித்த பெண் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.

அதன் போது குறித்த பெண் கொள்ளையர்களின் ஒருவரின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட வேளை , அப்பெண்ணை உதைத்து தள்ளி கீழே விழுத்தி விட்டு , பெண் அணிந்திருந்த 5 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்படு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...