download 8 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ATM இயந்திரம் கோாிக்கை! கையெழுத்து சேகாிப்பு!

Share

தோப்பூர் இலங்கை வங்கிக் கிளைக்கு ATM இயந்திரத்தை பொருத்தித்தருமாறு கோரி பொதுமக்களின் 5000 கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.

தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டனர்.

தோப்பூர் வர்த்தக சங்கம், பொதுமக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

தோப்பூரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் கிடையாது.

ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்  செல்ல வேண்டும்.

இந்நிலையில் தோப்பூரில் BOC கிளைக்கான ATM இயந்திரத்தை பொறுத்தித்தரகோரி நாளையிலிருந்து மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளது.

இவ்வாறு பெறப்படுகின்ற கையெழுத்துக்களின் பிரதிகள் அனைத்தும் தோப்பூர் இலங்கை வங்கிக்கிளை, திருகோணமலை பிராந்திய காரியாலயம், கொழும்பு தலைமை காரியாலம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

#srilankaNews

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...