IMG 20230420 WA0000
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கைதடி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிாிழப்பு!

Share
யாழ்.கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இரவு(19) 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து  பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன்  பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.
 இதன்போது முன்னால் வந்த லொறி அவரை மோதித்தள்ளியுள்ளது.
உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி மற்றும் லொறியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 #srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...