கத்தியால் குத்திக் கொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பணம் கொடுக்க மறுத்த வைத்தியர் படுகொலை! – யாசகர் வெறியாட்டம்

Share

பணம் கொடுக்க மறுத்த வைத்தியர் ஒருவரை யாசகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தலங்கமையில் இடம்பெற்றுள்ளது.

பல்பொருள் அங்காடிக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்த குறித்த வைத்தியர் தலங்கம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

மாலபே, பொத்துஅராவ வீதியில் வசிக்கும் 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேறும்போது அருகிலிருந்த யாசகருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யாசகர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...