9
இலங்கைசெய்திகள்

முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என்ற யாழ் எம்.பி : தென்னிலங்கையில் கிளம்பிய சர்ச்சை

Share

முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என்ற யாழ் எம்.பி : தென்னிலங்கையில் கிளம்பிய சர்ச்சை

பதவி விலகிய முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilangumaran) தெரிவித்த கருத்துக்கள் தென்னிலங்கையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலி கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ரன்வெல சமீபத்தில் பதவி விலகினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த க.இளங்குமரன், “இல்லை, இந்த வைத்தியர் பட்டம் அவரால் வழங்கப்படவில்லை, மக்களால் உருவாக்கப்பட்டது.

அவர் 1989 இல் ஜப்பானுக்குச் சென்றார், மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஜப்பானில் மருத்துவம் படித்தார்.

அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, நாடாளுமன்ற சபாநாயகராக மருத்துவ முனைவர் பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயத்தை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...