9 10
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று தீர்ப்பு

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று தீர்ப்பு

கட்டுநாயக்க (Bandaranayaka) சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேயகுணசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (22.07.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அசங்க அபேயகுணசேகர, நேற்று தோஹாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய, அசங்க அபேயகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருதுள்ளனர்.

இதன்போது, அவர் தலா ஒரு மில்லியன் ரூபா சரீர பிணை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...