9 10
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று தீர்ப்பு

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று தீர்ப்பு

கட்டுநாயக்க (Bandaranayaka) சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேயகுணசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (22.07.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அசங்க அபேயகுணசேகர, நேற்று தோஹாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய, அசங்க அபேயகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருதுள்ளனர்.

இதன்போது, அவர் தலா ஒரு மில்லியன் ரூபா சரீர பிணை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...

1739443473 archuna
இலங்கைசெய்திகள்

சிங்களப் போர் வீரரால் காப்பாற்றப்பட்டேன்: இராமனாதன் அர்ச்சுனா – பாதுகாப்புப் படையினருக்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, வெள்ளத்தில் சிக்கியிருந்த தன்னைச் போர் வீரர்கள் காப்பாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

srilankaflood 532067014
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றம்: அரசாங்கம் கவனம்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான...

1734575149 1
இலங்கைசெய்திகள்

சீனாவின் அவசர நிதியுதவிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி!

அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இலங்கைக்குச் சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் தாராளமான ஆதரவிற்காகச்...