25 15
இலங்கைசெய்திகள்

விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

Share

விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதாலேயே விசேட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு சபைக்கூட்டம் இடம்பெற்றபோதே, இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர், பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று (23.10.2024) இடம்பெற்ற நிகழ்வின்போது குறிப்பிட்டுள்ளார்.

 

மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஒக்டோபர் மாதத்திற்குள் பயங்கரவாத குழுக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

 

இந்நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை குறித்து அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரியந்த விஜேசூரிய கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...