கடல் அட்டைகளுடன்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த 3 கோடி ரூபா பெறுமதியான கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது!

Share

இலங்கைக்குக் கடத்த இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளுடன் ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதப்படுத்தப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, பட்டணம் காத்தான் புறவழிச் சாலைப் பகுதியில் கேணிக்கரைப் பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.

மற்றைய நபர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது இலங்கைக்குப் படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரியவந்தது.

அவரிடம் இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

#SriLanka&IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...