பாதுகாப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி, தராதரம் பாராமல் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதுகாப்புப் படையினரின் கடமைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடையூறு விளைவிப்பவர்கள், மோதல்களை ஏற்படுத்துபவர்கள் மற்றும் அவற்றை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையிலுள்ள இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்குமிடையில் பல்வேறு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment