16 7
இலங்கைசெய்திகள்

போர்க்குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகளுக்கு நெருக்கடி

Share

போர்க்குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகளுக்கு நெருக்கடி

இலங்கையில் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக மேற்குலக நாடுகளுக்கான வீசா பெற்றுக்கொள்வதில் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகள் இந்த நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

53, 55, 57, 58 மற்றும் 59ம் படையணிகளைச் சேர்ந்த படைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் படை அதிகாரிகள் வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான வீசா விண்ணப்பங்களின் போது அதிகாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த அதிகாரிகள் தங்களது சொந்த தேவைகளுக்கேனும் மேற்குலக நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

போரில் பங்கேற்ற படைவீரர்களுக்கும் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படைவீரர்கள் வீசா பெற்றுக்கொள்ள செல்லும் போது அவர்கள் பணியாற்றிய படைப்பிரிவு, படைத்தளபதியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் வழங்க நேரிடுவதாகவும் இவ்வாறான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஓய்வுநிலை லெப்டினன் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதனை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் உண்டு என்ற போதிலும் தமக்காக எந்தவொரு அரசாங்கமும் குரல் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, உண்மை, சமாதானம் மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டத்தினால் படையதிகாரிகள் தண்டிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...