Vaccine01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒமிக்ரோன் தொற்றினைக் கட்டுப்படுத்த களமிறங்கிய இராணுவம்!!

Share

ஒமிக்ரோன் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக மூன்றாவது கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ், நாட்டில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் ஓமிக்ரோன் தொற்றினைக் கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் 03ம் கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

Vaccine

ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலும் பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அடுத்தடுத்த விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கை நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்,...

9 19
இலங்கைசெய்திகள்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க...

8 19
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அனைவரும் கைகோருங்கள்.. எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர்த்தரப்பு மற்றும்...

7 19
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மருந்து இறக்குமதி தொடர்பில் சிறப்பு விசாரணை

அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின்...