கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஓல்கோட் மாவத்தையின் ஒரு மருங்கு வீதி மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியையும் பொலிஸார் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பல இராணுவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment