image 2f856f5aa0
அரசியல்இலங்கைசெய்திகள்

பிணைமுறி மோசடி : அர்ஜுனவுக்கு விடுதலை

Share

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (11) கட்டளையிட்டது.

பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் பிரிவாதிகளுக்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைப் பேண முடியாது என்று பிரதிவாதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை நீதிபதிகள் குழாம் ஏற்றுக் கொண்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஞ்சீவ மொராயஸ், தமித் தோட்டவத்த மற்றும் நாமல் பலேல்ல ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான நீதிபதிகளின் உடன்பாட்டின் பேரில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2 16
இலங்கைசெய்திகள்

மாவனல்லையில் மற்றுமொரு கோர விபத்து! இருவர் காயம்

மாவனல்லைப் பிரதேசத்தில் மற்றுமொரு பேருந்து – லொறி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

3 14
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

4 15
இலங்கைசெய்திகள்

சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது

சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைது...

5 14
இலங்கைசெய்திகள்

அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறும் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி ஓய்வு பெறவுள்ளதாக...