DSC04473
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மக்கள் சந்திப்பு நாளில் எங்கு செல்கிறார் ஆளுநர்?

Share

மக்கள் சந்திப்பு நாட்களில் ஆளுநர் எங்கு செல்கின்றார் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிள்ளனர்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு,  மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பை கோரியும் , நிரந்தர நியமனம் மற்றும் விடுமுறைகள் சிக்கல்களை நிவர்த்திக்க கோரியும்,  இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பிரதிநிதிகள் சிலரை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் ஆளுநர் வவுனியாவில் நடக்கும் நடமாடும் சேவைக்கு சென்றிருப்பதாகவும் இதனால் இன்றைய தினம் அவரை சந்திக்க முடியாது.

எனவும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஆளுநர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரமாட்டார் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பிரதிநிதிகள் முன்பள்ளி ஆசிரியர்களிடம் அவர்களுள் அவர்கள் அதிகாரிகள் தெரிவித்ததை தெரிவித்தனர்.

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு தடவையும் தாங்கள் வந்து ஏமாறுவதாகவும் திங்கட்கிழமைகளில் மக்கள் சந்திப்பு என தெரிவித்துவிட்டு ஆளுநர் ஒவ்வொரு திங்களும் எங்கு செல்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார் .

இதனையடுத்து ஆளுநர் இங்கு வரும் வரைக்கும் தாம் இங்கு அமர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...