images 4 2
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

குடும்பத் தகராறு முற்றியதில் பயங்கரம்: வீட்டுக்குத் தீ வைத்த தந்தை – மகளுடன் அவரும் பலி!

Share

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்குப் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததில், அவரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்த சோக சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் தீயை வைத்த 43 வயதுடைய தந்தை மற்றும் அவரது 13 வயதுடைய மகள் ஆகியோர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மகள், 66 வயதுடைய பாட்டி மற்றும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியைத் தாக்கி வந்துள்ளார். இது தொடர்பாகக் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தந்தை தீ வைக்கும் போது வீட்டில் இல்லாத 20 வயதுடைய மகன், சம்பவம் அறிந்து விரைந்து வந்து தனது தாய் மற்றும் சகோதரிகளைக் காப்பாற்ற முயன்ற போதே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தொடர்ச்சியான குடும்பத் தகராறு மற்றும் மதுப் பழக்கமே இந்தத் துயரச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...