GL 1 e1644248056904
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு!!

Share

இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை இன்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையை வலுப்படுத்துவதற்கான பொருளாதார முதலீட்டு முயற்சிகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், மீனவர்கள் விவகாரம் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பொருளாதார மீட்சிக்கு சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதுடன், அதிக இணைப்பின் மூலம் மக்களுடனான மக்கள் தொடர்புகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர் பதிவில் இன்று (07) தெரிவித்துள்ளார்.

நேற்று புதிடெல்லியை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ், இந்த பயணத்தின் போது, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...