1 16
இலங்கைசெய்திகள்

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

Share

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

பங்களாதேஷில் (Bangladesh) இடைக்கால ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் எப்போது ஹசீனா (Sheikh Hasina) ஆட்சி கவிழ்ந்ததோ அப்போது முதலே பெரும் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இஸ்கான் துறவியை கூட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேற்கு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்.

கடந்தாண்டு இந்த இராணுவ குழு மியான்மரில் பல பகுதிகளைக் கைப்பற்றினர். மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களைக் காட்டிலும் அதிக பகுதிகள் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசமே காணப்படுகிறது.

இந்நிலையில் பங்களாதேஷில் தெக்னாப் பிராந்தியத்தில் உள்ள சில பிராந்தியங்களை இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷின் பிரபல செயின் மார்டின் தீவு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாமும் இருக்கிறது.

இதனால் பங்களாதேஷிற்கு இது ரொம்பவே முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அது இப்போது ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...