1 16
இலங்கைசெய்திகள்

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

Share

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

பங்களாதேஷில் (Bangladesh) இடைக்கால ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் எப்போது ஹசீனா (Sheikh Hasina) ஆட்சி கவிழ்ந்ததோ அப்போது முதலே பெரும் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இஸ்கான் துறவியை கூட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேற்கு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்.

கடந்தாண்டு இந்த இராணுவ குழு மியான்மரில் பல பகுதிகளைக் கைப்பற்றினர். மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களைக் காட்டிலும் அதிக பகுதிகள் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசமே காணப்படுகிறது.

இந்நிலையில் பங்களாதேஷில் தெக்னாப் பிராந்தியத்தில் உள்ள சில பிராந்தியங்களை இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷின் பிரபல செயின் மார்டின் தீவு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாமும் இருக்கிறது.

இதனால் பங்களாதேஷிற்கு இது ரொம்பவே முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அது இப்போது ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...