24 662610f5e52c0
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை\

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter Attack) தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) நேற்று (21.04.2024) தென்னிலங்கை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி அல்லது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாய்மொழியாக வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) நிறைவேற்றத் தவறிய சூழலில், தற்போது அவர் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவற்றின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே (Ranil Wickremesinghe) தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெறும் தூதுவராகவே செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விவரிக்கப்பட்ட கொழும்பு வடக்கின் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றாமல் இருந்த தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon)இன்று பொலிஸ் மா அதிபராக (IGP) உள்ளார்.

மேலும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும், படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் நிலாந்த ஜெயவர்தன இன்று பொலிஸ் துறையின் இரண்டாம் நிலைப் பணிப்பாளராக உள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் நீதியை எதிர்பார்க்க முடியுமா என கருதினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...