இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை

Share
24 662610f5e52c0
Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை\

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter Attack) தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) நேற்று (21.04.2024) தென்னிலங்கை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி அல்லது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாய்மொழியாக வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) நிறைவேற்றத் தவறிய சூழலில், தற்போது அவர் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவற்றின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே (Ranil Wickremesinghe) தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெறும் தூதுவராகவே செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விவரிக்கப்பட்ட கொழும்பு வடக்கின் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றாமல் இருந்த தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon)இன்று பொலிஸ் மா அதிபராக (IGP) உள்ளார்.

மேலும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும், படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் நிலாந்த ஜெயவர்தன இன்று பொலிஸ் துறையின் இரண்டாம் நிலைப் பணிப்பாளராக உள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் நீதியை எதிர்பார்க்க முடியுமா என கருதினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...