10
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசியல் எதிர்காலம்: நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அநுரவின் அரசியல் எதிர்காலம்: நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் மேடையில் சொல்லப்படும் பொய்களை நிறுபிக்க முடியாத சந்தர்ப்பம் வரும்போது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவரின் ஆதரவாளர்களே சவால் விடுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

அடுத்த தசாப்தத்தில் அதை ஒரு தீர்க்கமான காரணியாக எமது கட்சி வலுவடையும்.

எமது கட்சியின் தலைவர் கட்சியை விட்டு வெளியேறியதால் உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜனாதிபதி தேர்தலின் போதும் கூட அவர் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவில்லை.

அடுத்த ஐந்து வருடங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anura Kumara Dissanayake) யார் சவால் விடுவார்கள் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவா? நாமல் ராஜபக்சவா? சஜித் பிரேமதாசவா? என கேட்கிறார்கள்.

இதற்கு நான் கூறும் பதில், சவால் விடுவது வேறு யாரும் அல்ல. அவரது குழுவினரே சவாலாக மாறுவார்கள். ஏனென்றால் தேர்தல் மேடையில் சொல்லப்படும் பொய்களை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இது நடைபெறும்.’’ என்றார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...