1 6
அரசியல்இலங்கைசெய்திகள்

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

Share

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி அதிக வாக்குகளை பெறுவார்.

இதன் மூலம் இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மகியங்கனையில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது முன்னாள் அரசியல் நண்பர், எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் தனது கடமைகளில் தவறிவிட்டார்.

எனவே பிரதான எதிர்க்கட்சி தலைவர் நிலைப்பாட்டை அவரால் தக்க வைக்கமுடியாது போகும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், தமது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. அத்துடன் கடந்த காலத்தில் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இருமுனைப் போட்டி மாத்திரமே இருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அனுர சஜித்தை வெற்றி கொண்டு எதிர்க்கட்சி தலைவராவார் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 6 வெளிநாட்டினர் கைது: விசா விதிமீறல் தொடர்பாக பொலிஸார் விசாரணை

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை, கந்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி...

world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரதுகல பூர்வீகக் கிராமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் மடுல்ல பிரதேசத்திற்குட்பட்ட ரதுகல (Rathugala) பூர்வீகக் கிராமத்தின் தலைவரான டானிகல மகா பந்தலகே சுதா...

world 43
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் 74 வெளிநாட்டினரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்: நிதி மோசடி தொடர்பாக விசாரணை

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட...