24 661a04e3297dd
இலங்கைசெய்திகள்

சஜித், அனுரவின் கல்வித் தகமைகளை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை

Share

சஜித், அனுரவின் கல்வித் தகமைகளை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் கல்வித் தகமைகளை அம்பலப்படுத்துமாறு சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுனர் நவீன் திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் எந்தத்துறையில் பட்டம் பெற்றவர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பவருக்கு குறைந்தபட்சம் ஒரு இளநிலை பட்டமேனும் இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர் ஒருவரை நியமிக்கும் போதும் பட்டமொன்று இருக்க வேண்டியது அவசியமானதாகும் என தெரிவித்துள்ளார்.

எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பட்டம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பட்டங்கள் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு மிகவும் அன்புடன் கோருவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...

25 6930ccccd21a5
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இளைஞர் படுகொலை: கைதான 6 பேரின் விளக்கமறியல் டிசம்பர் 15 வரை நீடிப்பு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...