25 6849454172978
இலங்கைசெய்திகள்

பிள்ளையான் தரப்பின் ஆதரவை கோரிய அநுர கூட்டணி

Share

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் கட்சியின் ஆதரவையும் தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது கூட்டணி இரண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மேயரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...