vajira
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிக அவசியம்!

Share

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிக அவசியம்!

.நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டை உலகத்தில் முன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் எம்.பியுமான வஜிர அபிவர்தன, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக சில அரசியல் குழுக்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் , பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான சட்டங்கள் அமலாக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என்றும் கூறினார்.

ஒரு நாடு கடனை வாங்கும் போது, ​​வாங்கிய கடனை கையாளும் முறைகள், கடனை செலுத்தும் முறை ஆகியவற்றை சரியாகக் கையாள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அப்போதுதான் அந்த நாடு உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...