எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளியான மற்றுமொரு செய்தி!-

Gas 1

நாட்டில் தற்பொழுது மீளவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

லிற்றோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், விரைவில் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிலை நீங்கும் எனவும் லிற்றோ நிறுவனத் தலைவர் தேஷர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறைந்தவிலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் சந்தர்ப்பம் இருந்தும், நிதி அமைச்சின் தலையீட்டுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளது.

இவ்வாறு லிற்றோ எரிவாயு நிறுவனத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் நலின் சமந்த குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையினால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version