24 662dd2e8aa1ba
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி அனுமதி: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

Share

வாகன இறக்குமதி அனுமதி: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe ) வெளியிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி தடை (Vehicle import) நீக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் (srilankan rupees) பெறுமதி சுமார் 7% வலுவடைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2024) 3% வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த வருமான இலக்குகளை அடைவதற்கு, வாகன இறக்குமதி செயற்பாடு தேவை என்ற திறைசேரி அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை, அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மோட்டார் வாகன இறக்குமதி மீதான தடை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கும், இறக்குமதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், திறைசேரிக் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் வாகன இறக்குமதி தடை நீக்கப்படாவிட்டால், வருமான இலக்குகளை அடைய முடியாது, எனவே வாகன இறக்குமதியை சீராக்க வேண்டும் என்று குழு முடிவு செய்துள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகரித்த வருவாய் இலக்கை கருத்தில் கொண்டு குழு இந்த முடிவை திறைசேரிக்குழு எடுத்துள்ளது.

அமெரிக்க டொலர் விலையை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே தடையை நீக்குவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விபரக்குறிப்பு, உற்பத்தி ஆண்டு உட்பட இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சுற்றுலாத் துறைக்கு தொடருந்து பெட்டிகள், வான்கள் உள்ளிட்ட 1,000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குழு முன்னர் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.

இந்தநிலையில், வாகனங்களின் இறக்குமதியானது தற்போது ஏற்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு இந்த ஆண்டு பெப்ரவரியில் 4,520 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அது மார்ச் மாதத்தில் 4,951 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகன இறக்குமதியால் இலங்கை வருடத்துக்கு 800 மில்லியன் டொலர்களை இழக்கும். எனினும் வரி வருமானம் 340 பில்லியன்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...