24 662aed969e73e
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

Share

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும் நாட்டில் குழப்பத்தை அதிகரிக்கும் மற்றொரு ‘அரகலயா’வை நாட வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

ஐ.டி.சி ரத்னதிப ஹோட்டல் திறப்பு விழாவின் போது உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னேற்றத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், மக்கள் மீண்டும் போராடாத பொருளாதார சூழலை நாட்டில் உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள் பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளை வலியுறுத்தினார்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய நிலைமையை நீங்கள் நினைவுகூர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனினும் இரண்டு வருடங்களுக்குள் நாம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பினோம்.

மீண்டும் அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...