12 6
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற அமர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு

Share

நாடாளுமன்ற அமர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய இன்று(18.06.2024) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன் காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, காலை 10.30 முதல் 5.00 மணி வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மேலும் நாளை 19 ஆம் திகதி கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 20 ஆம் திகதி யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...