u5h8J5ELx2mPV7q73lif 1
இலங்கைசெய்திகள்

அரிசி, மா, சீனி விலை குறித்து வெளியான அறிவிப்பு!

Share

அரிசி, மா, சீனி விலை குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும், அந்த உணவுகளின் சில்லறை விலை குறையாததால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் விலை குறைந்தாலும், சந்தையில் ஒரு கிலோ அரிசி 180 ரூபா தொடக்கம் 220 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


அரிசி ஆலைகளில் நெல் அரிசி கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
போக்குவரத்துக் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பால் அரிசி விலையும் உயர்ந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை குறைந்துள்ளதுடன், ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 232 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 315 ரூபாவாகும்.
எனினும், சில்லறை விற்பனை சந்தையில் வெள்ளை சீனி 240 முதல் 250 ரூபா வரையிலும், சிவப்பு சீனி 370 ரூபாவிலும், கோதுமை மா 230 ரூபாவிலும், பருப்பு 330 முதல் 340 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...