அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

Provincial Council election
Share

பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவது சாத்தியம் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி எல்லை நிர்ணய குழு காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரை தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமாயின் அதனை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...