திலீபன் நினைவிடத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் ஈகைச்சுடரினை மாவீரரின் தாயார் ஒருவர் ஏற்றிவைத்தார். பின்னராக தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 20230419 WA0019

#SriLankaNews

Exit mobile version