7 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

Share

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

உலக தரவு பகுப்பாய்வு அறிக்கைகளின்படி, இலங்கையில் குளுக்கோமா பாதிப்பு 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்த நிலை 3.54 சதவீதமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு, மார்ச் 10 முதல் 16 வரை குளுக்கோமா வாரம் என்று அறியப்படுகிறது, மேலும் இந்த ஆண்டின் கருப்பொருள் குளுக்கோமா இல்லாத உலகத்திற்காக ஒன்றுபடுவோம் என்பதாகும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும், குறிப்பாக தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அல்லது உறவினர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

குளுக்கோமாவை இனங்காணுவதன் மூலம் குருட்டுத்தன்மையை தடுக்க முடியும் எனவும் உலகளவிலும் இந்நாட்டிலும் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று குளுக்கோமா எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் உள்ள கண் சிகிச்சை நிலையங்கள், காலி, புத்தளம், பதுளை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களுக்கு வைத்தியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் குளுக்கோமா விஷேட கண் மருத்துவ மனைகளை நடத்தும்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...