IMG 20220820 WA0004
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் விருது வழங்கும் நிகழ்வு

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களினை உள்ளூர் மற்றும் சர்வதேச இணைப்புகளினூடாக வலுப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு பிரிட்டிஷ் கவுன்சில் GGP-UNICYCLE 2022 என்கிற செயற்றிட்டத்தை மாணவர்களை மையமாக முன்னெடுத்தது.

பால்நிலை மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வு, காடாக்கல் மற்றும் காடழிப்பு சார்ந்த விழிப்புணர்வு, சேதன விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் மீள் சுழற்சி என்பன இந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்,செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செயற்றிட்டத்துடன் தொடர்பான ஆவணப்படமொன்றும் ஆற்றுகையொன்றும் செயற்றிட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...